விருதுநகர்

கணவர் இறந்த துக்கம்..3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து மனைவி தற்கொலை.!!

Published by
பால முருகன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தன்னுடைய 3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி தான் பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 16 மற்றும் 11 வயதுடைய மகள்கள் மற்றும் ஒரு வயது மகனும் இருந்தனர்.

இந்நிலையில், ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, இந்த துக்கத்தை தாங்கமுடியாத பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் அவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் 4 சடலங்களை கைப்பற்றினார்கள். மேலும், இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். கிணற்றில் விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

19 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago