மின்னல் தாக்கியதால் தரைமட்டமான பட்டாசு ஆலை..!

விருதுநகர், ஏழாயிரம் பண்ணை அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில், திடீரென மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கியதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய பின்னர் மின்னல் தாக்கியதால், நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை.