மத்திய அரசை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி…!!

Default Image

பட்டாசு உள்ளிட்ட தொழில்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
பட்டாசு, பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழில்களை மத்திய அரசு நெருக்கடிக்குள் தள்ளியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். ராமகிருஷ்ணாபுரத்தில் துவங்கிய பேரணி ராஜபாளையம், வெம்பக்கோட்டை வழியாக சிவகாசியை சென்றடைந்தது. பேரணியின்போது மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்