Droupathi amman temple [Image source : Kumudam]
திரௌபதி அம்மன் கோவில் திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கோவிலை திறக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் ஒரு பிரிவினரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என மற்றொரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பேசுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாச்சியர் சீல் வைத்தார்.
இதனை எதிர்த்து கோவிலை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அருகில் உள்ள கிராமத்தினை சேர்ந்த நபர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில், கொரோனா காலத்தில் கூட கோவிலில் பூஜை செய்யப்பட்டது. தற்போது பக்தர்களை அனுமதிக்காமலாவது கோவிலில் பூஜை மட்டும் செய்வதற்காக மட்டுமாவது திரௌபதி அம்மன் கோவிலை திறக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், இந்த கோவிலை திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என வாதிடப்பட்டது. இதனை ஏற்று, இரு தரப்பினர் இடையே பிரச்சனை நிலவுவதால் கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தற்போது அதிகாரிகளால் விசாரணை நடைபெற்று வருவதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆதலால் இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…