விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Default Image

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து களப்பணியில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும், விரைவில் அவர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும் கூறினார். பின்னர் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்