அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றிய ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்….

Default Image

விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதால், விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்துவந்தன. இதைத் தொடர்ந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து பிரிவு பறக்கும் படையினர், 10-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.உரிமம் இன்றியும், முறையாக பராமரிக்கப்படாமலும் இயக்கிய ஆட்டோக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், செஞ்சி, திண்டிவனம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்துவருவதாக தெரிவித்தனர்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்