வாழ்வாதார கோரிக்கையை வீடியோ மூலம் பதிவிட்டு அனுப்பிய மாணவியின் தேவையை நிறைவேற்றிய, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செல்போனுக்கு, கடந்த 13-ம் தேதி வாட்ஸ் அப் மூலமாக ஒரு வீடியோ வந்தது. அதில் செய்யாறைச் சேர்ந்த பள்ளி மாணவி ரூபிகா, தனது அப்பா வேலையின்றி தவித்து வருவதாகவும், தங்களது வாழ்வாதார தேவைக்காக சொந்தமாக ஆடுகள் வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பெற்றோரின் மீது மாணவி கொண்ட பாசத்தைக் கண்டு, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை மாணவியின் வீட்டிற்கே சென்று வழங்கினார். மாணவியின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அவர்கள் நிரந்தரமாக வசிக்க 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டி தரவும் ஏற்பாடு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…