ஆரணி அருகே நகை திருட்டு பொதுமக்கள் தர்ம அடி.

Default Image

 திருவண்ணாமலை; மாவட்டம் ஆரணி அருகே நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாக கூறி, நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். நாவல்பாக்கம் என்னும் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி பூபதி என்பவரது வீட்டிற்கு வந்த பீகார் இளைஞர்கள் இருவர், தங்க நகைகளை பாலீஷ் செய்வதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 2 சவரன் நகைகளை பூபதி கொடுத்த போது அதில் அரை சவரன் தங்கத்தை சோப்புநுரை மூலம் இளைஞர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர்  பொதுமக்கள் அவர்களை கண்டுபிடித்து   காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நகையை திருடுகூதற்கு பயன்படுத்தபட்ட பொருட்கள் கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தங்க நகைகளை கொள்ளையடிக்க பீகாரை சேர்ந்த கும்பல் ஆங்காங்கே சுற்றித்திரிவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…

sources; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்