திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கான நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்…!!

Default Image

திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 205-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 205-ன் விரிவாக்கப்பணி நடைபெற்ற போது தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிலம் கொடுத்த 400-க்கும் மேற்பட்டவர்கள் 2010-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்த வழக்கறிஞர்கள் விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்