திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர்.
அதன்பிறகு சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது நண்பர்களான சரவணன், அஜ்மீர், முகமது உசேன்,முகம்மது மைதீன் ஆகியோரும் வந்தனர். கோவையில் உதிரி பாகங்களை வாங்கி விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். முகம்மது மைதீன் வேனை ஓட்டியுள்ளார். நள்ளிரவில் அவர்களது ஆம்னி வேன் கோவை – திருப்பூர் சாலையில் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி வந்தது. வேன் வேகமாக வருவதை அறிந்த லாரி டிரைவர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். ஆனாலும் ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இந்த கொடூர விபத்தில் கார்த்தி, அவரது தம்பி மாணிக்கராஜ், நண்பர்கள் சரவணன்,அஜ்மீர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…