“அதிகாரம் சிலரிடம் குவிந்து வருவது ஆபத்தானது” முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன்..!!

Published by
Dinasuvadu desk

திருப்பூர்,
நாட்டில் சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று காந்தி கிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் கூறினார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செவ்வாயன்று இலவச காய்கறி கிராம விழிப்புணர்வு தொடக்க விழா கல்லூரி முதல்வர் எஸ்.இராமையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விழுதுகள் சமூக நல அமைப்பின் இயக்குநர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் கிராம மேம்பாட்டு எழுத்தாளர் பாரதி சின்னசாமி எழுதிய “எல்லாமே இலவசம்” என்ற நூலை வெளியிட்டு காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “உலகிலும், இந்தியாவிலும் சகிப்புத்தன்மை குறைந்து, ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. வேலையின்மை பெருகி, ஊதியம் குறைந்து வருகிறது. செல்வச் செழிப்புள்ள சிலரிடம் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது. எல்லாவற்றையும் மேலேயே குவித்துக் கொள்வது நல்லதல்ல. கீழிருந்து மாற்றம் வர வேண்டும். கிராமங்களுக்கு தேவையான பணிகளை அந்த கிராமங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். குளத்தைத் தூர்வாருவதற்கு மத்திய அரசு மூலம் நிறைவேற்ற வேண்டியதில்லை. அந்தந்த கிராமமே என்னென்ன பணி தேவை என்று தீர்மானித்து நிறைவேற்றலாம்.

இந்தியா சுதந்திரம் பெறும்போது இருந்த நிலையில் இருந்து கீழிறங்கி வருகிறது. சாதிவெறி, மதவெறி தலை தூக்குகிறது. இன்றையஇளம் தலைமுறையினர் வன்முறையை நிராகரிக்க வேண்டும். நேர்மையுடனும், துணிவுடனும் மாற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்றார். இவ்விழாவில் கவிஞர் உமா மகேஸ்வரி, கவிஞர் வாளவாடி வண்ணநிலவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.மோகன்குமார் வரவேற்றார். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டது. எல்லாமே இலவசம் நூல் ஆசிரியர் பாரதி சின்னசாமி ஏற்புரை வழங்கினார். நிறைவாக விருதுகள் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரா நன்றி கூறினார்.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago