நெல்லை , தேனியில் மழை ..!!

Default Image
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு
நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது.
நெல்லையில் கனமழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு:
 
நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 104 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 24 அடியாகவும் உயர்ந்துள்ளது.
 
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை:
 
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 108 கனஅடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து வராக நதிக்கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு:
 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவோ குளிக்கவோ வனத்துறையினர் இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்