திருநெல்வேலி

நெல்லை : 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்.! இரங்கல் கூறி நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.!

Published by
மணிகண்டன்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது கடல் அலை இழுத்து சென்றதில் ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கியுள்ளனர். மீதம் உள்ள ஒரு மாணவன் மட்டும் கரை சேர்ந்துள்ளான். கடலில் இழுத்து செல்லப்பட்ட மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு செய்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார். கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்கள் இரவு முழுவதும் தேடிய நிலையில், இன்று காலை 3 சிறுவர்களின் உடல்களும் கரை ஒதுங்கின.

இந்த சமபவத்தை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

GT vs MI : கேப்டன் பாண்டியா என்ட்ரி! இன்னைக்கு என்னெல்லாம் செய்யப் போறாரோ.?

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…

56 minutes ago

தவெக vs திமுக : “விஜய் தொண்டர்களுக்காக தான் அப்படி பேசியிருப்பார்!” இபிஎஸ் பேட்டி!

சேலம் : நேற்று  தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…

2 hours ago

செங்கோட்டையனின் ‘திடீர்’ டெல்லி பயணம்.! இபிஎஸ் ரியாக்சன் என்ன?

சென்னை :  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

Live : மியான்மர் நிலநடுக்க பாதிப்புகள் முதல்… உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…

4 hours ago

எந்த பயனும் இல்ல., ரிட்டயர்டு ஆகிடுங்க.., CSK-வில் தோனி மவுசு குறைகிறதா?

சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…

4 hours ago

மியான்மர் நிலநடுக்கம் : 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா!

நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…

5 hours ago