Tamilnadu Governor RN Ravi - Minister EV Velu [File Image ]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று இருந்தார். கிரிவலப்பாதை சுற்றிவந்த அவர் கூறுகையில், கிரிவலப்பாதையில் இருக்கும் அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
ஆளுநரின் கருத்துக்கு பலவேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், உணவு என்பது தனிநபர் உரிமை. எதனை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என மக்களுக்கு அரசு உத்தரவிட முடியாது.
பௌர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையில் உள்ள ஹோட்டல்களில் அசைவம் சமைக்கப்படுவது இல்லை என்பதையும் குறிப்பிட்டார். நீட் விலக்குக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ரவி கூறிய கருத்து பற்றி பேசுகையில் ஆளுநர் மத்திய அரசின் கொள்கையினை வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் எனவும் தனது கருத்தை அமைச்சர் ஏ.வ.வேலு குறிப்பிட்டார்.
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…