திருநெல்வேலி கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்…!

Default Image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியால் மேலும் ஒரு அடி முன்னேற்றம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் ஒதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் அறை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் சுடலைராஜ், கிளைச்செயலாளர் முருகன் உள்ளிட்ட மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கிய டி.கே.ரெங்கராஜன் அவர்களுக்கும் அதற்காக முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் மரியதாசன்,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்