திருநெல்வேலி

நெல்லை மேயர் விவகாரம் – நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், அங்கு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று, நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, திமுக சார்பில் மேயராக பி.எம். சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவியது. […]

#DMK 7 Min Read
Nellai Mayor

தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! – நெல்லை ஆட்சியர்

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள […]

#rains 5 Min Read
thamirabarani

நெல்லை, தூத்துக்குடியில் டாடா… தமிழ்நாட்டில் ரூ.7000 கோடி கூடுதல் முதலீடு!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]

#Nellai 5 Min Read
tata

புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்த நெல்லை.. தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்.!

உலகம் முழுக்க இன்று மக்கள் 2024 புத்தாண்டை மகிழ்ச்சியாய் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி, வேளாங்கன்னி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகமலாக இருந்தது. அதே போல சுற்றுலா தலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து திங்கள் (இன்று) புத்தாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என பல்வேறு சுற்றுலா தளங்களிலும் […]

Happy New Year 2024 5 Min Read
Tirunelveli New Year Celebration 2024

நெல்லையில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.! 6 பேரிடம் தீவிர விசாரணை.!

திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர், பாஜக இளைஞரணி பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது வீட்டருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று ஜெகனை அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமுற்ற ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை போலீசார், தனிப்படைகள் அமைத்து […]

3 Min Read
Tirunelveli BJP Member Jegan Murdered

நெல்லை : 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்.! இரங்கல் கூறி நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலை இழுத்து சென்றதில் ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கியுள்ளனர். மீதம் உள்ள ஒரு மாணவன் மட்டும் கரை சேர்ந்துள்ளான். கடலில் இழுத்து செல்லப்பட்ட மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேரில் […]

3 Min Read
Tamilnadu cm mk stalin

தீவிரவாதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு போல சாதிய வன்முறையை தடுக்க தனிப்பிரிவு.! திருமாவளவன் பேட்டி.!

சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தையே பரபரப்பாகிய சாதிய வன்முறை சம்பவம் தான் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை சக மாணவர் கும்பல் வெட்டிய சம்பவம். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தாக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் மாணவரின் தங்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதற்கு […]

6 Min Read
VCK Leader Thirumavalavan

#BREAKING : நாங்குநேரி சென்று கருத்துக்கள் கேட்கப்படும் – நீதியரசர் சந்துரு

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் […]

3 Min Read
chandru

உணவு என்பது தனிப்பட்ட உரிமை.! ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலடி.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று இருந்தார். கிரிவலப்பாதை சுற்றிவந்த அவர் கூறுகையில், கிரிவலப்பாதையில் இருக்கும் அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என கூறியிருந்தார். ஆளுநரின் கருத்துக்கு பலவேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், உணவு என்பது தனிநபர் உரிமை. எதனை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என மக்களுக்கு அரசு உத்தரவிட முடியாது. பௌர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையில் உள்ள […]

3 Min Read
Tamilnadu Governor RN Ravi - Minister EV Velu

நாங்குநேரி சம்பவம் : 6 பள்ளி மாணவர்களை அடுத்து மேலும் ஒருவர் கைது.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை […]

4 Min Read
Arrest

நெல்லையில் பயங்கரம்.! அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!  

திருநெல்வேலி பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  திருநெல்வேலி பேட்டை பகுதி மயிலாபுரத்தை சேர்ந்தவர் 52 வயதான பிச்சை ராஜு. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை பஞ்சாயத்து துணை தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ள இவர் பேட்டை எம்ஜிஆர் நகரில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு மதுபான பார் நேரம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் வீரபாகு நகர் அருகே சென்று […]

4 Min Read
Murder

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்..!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம்.  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களுங்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இத்தாலி நாட்டின் பாரி பல்கலைக்கழகத்துடன் […]

2 Min Read
msuniversity

கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் நவராஜ் சஸ்பெண்ட்…!

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கள்ள சாராயம்  அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பிலும் தமிழக காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில்,  கஞ்சா விற்பனை […]

3 Min Read
suspend

திருவண்ணாமலை காவல்துறை அதிரடி.! டிரோன் மூலம் கள்ளச்சாராய கண்காணிப்பு பணி.!

திருவண்ணாமலை பகுதியில் டிரோன் கேமிரா மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன் […]

3 Min Read
Drone Camera

நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம்.! சரக டிஐஜி அதிரடி உத்தரவு.!

நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பணியிடை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அம்பாசமுத்திரம் பகுதியில் பல் பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கும் பணி வழங்கப்பட்டுளளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

2 Min Read
Nellai Police

நெல்லை விளையாட்டு மைதான விபத்து – மாநகராட்சி ஆணையர் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்..!

விளையாட்டு மைதானத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நோட்டீஸ். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பின் […]

4 Min Read
voc playground

நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து..! மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பின் மாநகராட்சி […]

3 Min Read
voc playground

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம்.! சபாநாயகர் அப்பாவு தகவல்.! 

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம் என சபாநாயகர் அப்பாவுதெரிவித்துள்ளார்.   திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் சார்பாக அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பொருநை அருங்காட்சியகம் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில்,  பொருநை நாகரீகம் என்பது, பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன்பெரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஆதிச்சநல்லூர், சிவகளை, […]

6 Min Read
TN Speaker Appavu

பல் பிடுங்கிய விவகாரம்.! 24 காவலர்கள் பணியிடமாற்றம்.! எஸ்பி சிலம்பரசன் அதிரடி உத்தரவு.!

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்து பலரது பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணைக்காக அழைத்து வந்த பலரது பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதியப்பட்டு துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உட்பட்டு உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் […]

2 Min Read
Balveer Singh

பல் பிடுங்கிய விவகாரம்.! ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.!

பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது 4வது வழக்கு பதியப்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ,  அம்பாசமுத்திரம் பகுதி சுற்றுவட்டாரா பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்கள் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த்தாக அவர் மீது தொடர் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் மீது அமுதா ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள அளித்த […]

3 Min Read
Balveersingh