முற்றிலும் முடங்கிய அரசு பேருந்துகள்!திருச்சியில் மக்கள் கடும் அவதி ….

Default Image

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் அரசு பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தேவை என அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சில தனியார் பேருந்துகள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டதால், பயணிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்குள் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்று பயணிகளை ஏற்றி வருகின்றன. தனியார் நகரப் பேருந்துகள் எந்த அனுமதியும் இன்றி வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்