துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
துாத்துக்குடி நகரில் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிகரித்து விட்டனர்.இதனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இது குறித்து மாவட்ட எஸ்பி.மகேந்திரன் அறிவுரையின்படி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் நகரில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.இதில் 30 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேகமாக செல்வது பற்றி கூறும் பாேது,
வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்கள் வாகன எண்களை குறித்து அதன்மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியதுடன் அவர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்து சட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.இது போன்ற வகுப்புகள் துாத்துக்குடி காவல் உட்கோட்டத்தில் காவல்நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
இது போல் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.அப்போது போக்குவரத்து ஆய்வாளர்கள் சந்தனகுமார்,உதவி ஆய்வாளர்கள் மயிலேறும் பெருமாள்,நம்பிராஜன்,வேலாயுதம் மற்றும் போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைதிருங்கள்.
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…