தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் ரோட்டில் கல்லூரணி என்னும் கண்மாய் உள்ளது.
இந்த கண்மாய் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. கண்மாயின் நடுப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனை அந்த பகுதியில் சென்ற மக்கள் பார்த்தனர். அவர்கள் சந்தேகத்தின் பேரில் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அந்த மூட்டையில், 1½ அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட சிவலிங்கம் கல்சிலையும், 20 கிலோ எடை கொண்ட பீடமும் இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சிலையை கைப்பற்றினர். அந்த சிலையை ஏதேனும் கோவிலில் இருந்து திருடி கொண்டு வந்து பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதன்பிறகு போலீசார் சிலையை ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…