மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தகாத வார்த்தையால் காவல்துறை அதிகாரி உடனடியாக ஆயுத படைக்கு மாற்றம்…!!

Default Image

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் சங்கரன் அவர்களை தகாத வார்த்தைகளால்  திட்டிய காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை  இடை நீக்கம் செய்யக்  கோரி தாளமுத்துநகர் காவல் நிலையம் இன்று நள்ளிரவு 9.30 மணிக்கு முற்றுகை நடைபெற்றது.
உடனே காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை  ஆயுத படைக்கு மாற்ற செய்ய போராட்டம் நள்ளிரவு நடைபெற்றது. அதன் பின்னர் எஸ்.பி மகேந்திரன் காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை ஆயுத படைக்கு  மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.                இதில் தாமோதரன் , ராமகிருஷ்ணன் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி  மாவட்டச் செயலாளர் எம்.எஸ். முத்து, மாநகரச்செயலாளர் கண்ணன், மாநகரத் தலைவர் முத்துகிருஷ்ணன், பாலா, காஸ்ட்ரோ, தவமுனி, ஆனந்த் ராஜ் ஜேம்ஸ், அருண், ஆத்திமுத்து உட்பட  பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

இவர் தெர்மல் நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இருந்த போது அவர் செய்த பொறுக்கி தனத்தை தட்டி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி புறநகரகுழு உறுப்பினரும் 51வது வார்டு கிளைச்செயலாளருமான முத்துசாமி அவர்கள் மீதும்,காதர்மிரான் நகர்,பூரணம் ஹோட்டல் உரிமையாளர் C.தினகரன் மற்றும் கடையின் ஊழியர் நரேஸ்குமார் தாக்கி கடைகளை சூறையாடியதற்காக தாளமுத்துநகர் காவல்நிலையத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்