திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார்.
அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் தேர்வை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றும் அதில் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்..
ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளப்பியது.இதனால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர்.
கல்லூரி வளாகத்தில் கையெழுத்து இயக்கம் , கருப்பு அட்டை அணிந்து செல்லுதல் , வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் என போராட்டத்தை முன்னெடுத்தனர்.அது மட்டுமில்லாமல் திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை திரட்டி பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டமும் நடத்தினர்.இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் , சத்யா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் தினேஷ் , ஜாய்சன் , சுப்புலெட்சுமி மற்றும் திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்ட தலைவர் , செயலாளர் கூறுகையில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகதின் துணை வேந்தர் பாஸ்கர் ஏழை மாணவர்களின் கல்வியை சீரழிக்க வேண்டுமென்று செயல்படுகிறார்.பல்கலைகழக நிர்வாகம் முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் 1 1/2 லட்சம் மாணவ மாணவிகளின் கல்வியை சீரழிக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு விட்டு பரிகாரம் தேடிக்கொள்வதற்காக “கோவில் கோவிலாக சென்று சாமி” ஆடிவருகிறார்.தமிழில் தேர்வு எழுத வேண்டும் என்று காலகாலமாக இருந்த பழைய நடைமுறையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும்.அது மட்டும் இல்லாமல் புதிதாக உயர்த்தியுள்ள கான்டொனேசன் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் இந்திய மாணவர் சங்கம் தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
DINASUVADU
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…