தூத்துக்குடி பெண்களுக்கு அரிய வாய்ப்பு.! சுய உதவி குழுவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை…

Published by
மணிகண்டன்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் (BLF), ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF), சமுதாய வள பயிற்றுநர்கள்(CRPs) மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு (SHG) பயிற்சி அளித்திட வட்டார வள வல்லுநர் (BRP) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அப்பதவிக்காக கேட்கப்பட்டுள்ள தகுதிகள் குறித்தும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதே ஆகும்.

இப்பணிக்கான தகுதி விவரங்கள்…

  • சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • 01.03.2024 அன்று 25-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • வட்டார அளவிலான கூட்டமைப்பு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 2-3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • தகவல்களை தெரிவிக்கும் திறன் மற்றும் மக்களிடம் வெளிப்படுத்தும் தனித்திறமை பெற்றிருக்க வேண்டும். செயல்திறன்
  • கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.(Excel, Word & Etc)

மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு, விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் வரும் ஆகஸ்ட் 09ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை கட்டடம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி-க்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சுய விவரங்கள் (Bio Data) அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பித்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

8 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

8 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

9 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago