ஸ்டெர்லைட்டை திறக்கவா ? “வேண்டாமா ? முடிவு செய்கிறது 3 பேர் கொண்ட குழு” தூத்துக்குடியில் பரபரப்பு..!!

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.அதைத்தொடர்ந்து  தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடி வருகின்றனர்.

அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளரிடம் கூறியதாவது , ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு  இன்று காப்பர் ஸ்லக் பகுதியை பார்வையிடுகிறார். நாளை காலை ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஆய்வு செய்கிறது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் குறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு 11.30 மணிக்கு அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் , அமைப்புகள் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை சொல்லலாம் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்.

தொடர்ந்து பேட்டியளித்த அவர் இந்த குழுவினருடன் வருவாய் , துறை , காவல்துறை ,மாசுகட்டுப்பட்டு அதிகாரிகள் உடனிருப்பர்.இந்த குழு தூப்பாக்கிசூடு சம்மந்தமாக கேட்கமாட்டார்கள் இந்த குழு ஸ்டெர்லைட் திறக்கவே , வேண்டாமா என்று கருத்து கேட்டு ஆய்வு செய்ய வருகிறார்கள் என்றார்.வாய்ப்பு இருந்தால் ஏனைய பகுதிகளுக்கு ஆய்வு நடத்த செல்வார்கள்  என்றார் மாவட்ட ஆட்சியர்.

DINASUVADU

Recent Posts

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

47 mins ago

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…

47 mins ago

இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!

டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…

1 hour ago

சளி ,இருமல் ,உடல் வலியை குணமாக்கும் சுக்கு பால் செய்யும் முறை..!

சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால்  செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…

2 hours ago

“கேப்டனிடமிருந்து சுதந்திரம் தேவை”..ரோஹித் சர்மா கொடுக்கிறாரா? முகமது ஷமி பேச்சு!

பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…

2 hours ago