உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் வழக்கில் மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்திருந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆலையை மூடக்கோரி அருகே உள்ள கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டும் என வைகோ தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவிசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக எந்த அனுமதியும் வழங்கவில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை, மாநில சுற்றுசூழல் மற்றும் வனத்துறை, மத்திய, மாநில மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகிய துறைகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…