மத்திய, மாநில அரசுக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் வழக்கில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் வழக்கில் மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்திருந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆலையை மூடக்கோரி அருகே உள்ள கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டும் என வைகோ தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவிசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக எந்த அனுமதியும் வழங்கவில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை, மாநில சுற்றுசூழல் மற்றும் வனத்துறை, மத்திய, மாநில மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகிய துறைகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.