“மக்களுக்காக களம் இறங்கிய DYFI முதல்கட்டமாக கையெழுத்து இயக்கம்…!!

Published by
Dinasuvadu desk

கோவில்பட்டி ,

கோவில்பட்டி தமிழக நகராட்சிகளிலே முதன்மையான நகராட்சி என்ற அங்கீகாரத்தை சமீபத்தில் பெற்றது.ஆனால் இன்று வரை கோவில்பட்டி நகராட்சியில் தரமான , சுத்தமான பொதுகழிப்பிடம் என்பது இல்லை.அதிக மக்கள் தொகையையும் , அதிக வணிக வளாகம்  கொண்ட கோவில்பட்டியில் கட்டமைப்பு வசதி என்பது மிகவும் குறைவு என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

 

இந்நிலையில் கோவில்பட்டியில் பொது கழிப்பிடம் அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ) சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.அதில் மக்களின் நலன் கருதி முன்னோடி நகராட்சி என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தரமான கழிப்பிடம் வசதி வேண்டும் என்று கோரிக்கை வாசகம் இருந்தது.இன்று பொதுமக்கள் , வணிக வியாபாரிகள் , குடியிருப்பு வாசிகள் , மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் என அனைத்து பகுதி மக்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) சார்பில் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார்.கோவில்பட்டி நகர தலைவர் துணை தலைவர் மகாராஜன் , துணை செயலாளர் உமா சங்கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவிக்கையில், கோவில்பட்டி நகராட்சிக்கு தரமான கழிப்பிட வசதி வேண்டும்.இது ஒரு அமைச்சரின் சட்டமன்ற தொகுதி எனவே நாங்கள் முதல்கட்டமாக நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் அமைச்சரின் கவனத்திற்கு சென்று உடனே பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் இல்லையென்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) சார்பில் வலுவான போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) நடத்திய இந்த கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கழிப்பிட கோரிக்கைக்காக நடத்த இருக்கும் போராட்டம்  கோவில்பட்டி மக்களிடையே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருதுவதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

DINASUVADU 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago