பேக்கரி கடைக்காரர் மீது தாக்குதல் : வியாபாரி கைது

Default Image
சாத்தான்குளம் அருகே பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய பழைய இரும்பு வியாபாரி கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பொத்தன்காலன்விளையில் திருக்கல்யாண மாதா தேவாலயம் உள்ளது. இங்கு நாகர்கோவில் மற்றும் கேரளா பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்துசெல்வர். மேலசாத்தான்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் ஆண்டன்பி ரகாஷ்ராஜ்(36). இவர் சென்னையில் பழைய இரும்பு பொருள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆண்டன்பிரகாஷ் குடும்பத்துடன் பொத்தகாலன்விளை ஆலயத்திற்கு வந்தார்.
பின்னர் அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்றபோது அவரது குழந்தைகள் ஆசையுடன் ஜெல் மிட்டாய் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட மிட்டாய் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஆபத்து. அப்படி இருக்கும்போது கடையில் வைத்து ஏன் விற்பனை செய்கிறீர்கள் என்று கடை உரிமையாளர் அதே ஊரைச் சேர்ந்த தினேசன்(43) என்பவரிடம் ஆண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் கடை உரிமையாளர் தினேசன் தாக்கப்பட்டார். அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தட்டார்மடம் எஸ்.ஐ. சுந்தரம் விசாரணை நடத்தி ஆண்டன் பிரகாஷ்ராஜை கைது செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்