தூத்துக்குடியில் குழந்தை இறந்து பிறந்தது..!! மருத்துவர்கள் இல்லாததே காரணம் உறவினர்கள் குற்றச்சாட்டு .

Published by
Dinasuvadu desk
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
கடம்பூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 23). கர்ப்பமாக இருந்த இவர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் செல்வராணியை அவரது குடும்பத்தினர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் டாக்டர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். தொடர்ந்து செல்வராணியை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் செல்வராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர் இல்லாத காரணத்தால் செல்வராணிக்கு செவிலியர்களே  பிரசவம் பார்த்தனர். இதில் செல்வராணிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்வராணியின் உறவினர்கள் கூறுகையில்,
டாக்டர்கள் இல்லாததால் நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்ற்றோம் என்று கிளம்பிய போது டாக்டர் வந்து விடுவார் என்று கூறி செவிலியர்கள் டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததே குழந்தை இறப்புக்கு காரணம் என்றனர்.எனவே அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் மீதும், கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர்கள் மீதும் நடவடிடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்..
டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்து குழந்தை இறந்த சம்பவம்  மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
dinasuvadu

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

39 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago