வீரபாண்டியன்பட்டணத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் வீடுபுகுந்து ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், மெடனா தெருவைச் சேர்ந்தவர் சேசைய்யா (80). இவரது மனைவி எல்ஜின் அகாட்டார் (76). இவர்களுக்கு 2மகன், 2மகள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேசியஸ்(40)காயல்பட்டினத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருடன் சேசைய்யா, எல்ஜின் அகாட்டார் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இரவில் எல்ஜின் அகாட்டார் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கணவர் வீட்டின் உள்ளே இருந்த நிலையில், டி-சர்ட், லுங்கி அணிந்த மர்ம நபர் வீட்டில் புகுந்து எல்ஜின் அகாட்டார் கழுத்தில் அணிந்திருந்த 7பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாகும். இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், எஸ்ஐ ரசலையன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா…