திருவாரூர்

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

4 Min Read
rain tn

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுற..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

1 Min Read
Default Image

மன்னார்குடியில் புதிய பேருந்துநிலையம்.! கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

மன்னார்குடியில் புதிய பேருந்துநிலைய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மன்னார்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு எனும் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளார். திருவாரூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகளை மேற்பார்வை செய்து விட்டு, திருவாரூர் தியாகராஜ கோவிலின் கமலாலயம் குளத்தில் படகில் சென்றார். அந்த குளமானது தனது பழைய நினைவுகளை நினைவூட்டுவதாக […]

3 Min Read
Default Image

திருவாரூரில் நாளை, நாளை மறுநாள் ட்ரான் பறக்க தடை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரான் பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு. சமீப காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், வரும் பிப்.21, 22 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள […]

3 Min Read
Default Image

#Breaking: திருவாரூரில் நாளை மட்டுமின்றி மற்றொரு நாளும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை, பிப்ரவரி 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 25 ஆம் தேதியும் பள்ளிகள் இயங்காது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை மகா சிவராத்திரி பண்டிகை வருவதை ஒட்டி, முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக பிப்ரவரி 18 ஆம் தேதி பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் […]

2 Min Read
Default Image

#Breaking: இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை : சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மழையின் காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை பள்ளி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளை மகா சிவராத்திரி பண்டிகை வருவதை ஒட்டி, முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

இவர்கள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயம் – திருவாரூர் ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது […]

- 4 Min Read
Default Image

#BREAKING: திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

புயல் எச்சரிக்கை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட எட்டு  மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி இருந்தார்.

#TNGovt 2 Min Read
Default Image

தஞ்சை, திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதுபோன்று, மழை மற்றும் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

#Cyclone 2 Min Read
Default Image

#Red Alert: டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – வானிலை மையம்

கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]

#Heavyrain 4 Min Read
Default Image

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக சில பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதன்படி, கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#Rain 2 Min Read
Default Image

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

திருவாரூரில் சிக்கன் சாப்பிட்ட செல்வ முருகன் என்ற இளைஞர் உயிரிழப்பு.  திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், இவருக்கு பூ முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்,  5 வகை சாதத்துடன் சேர்த்து சிக்கன்  பரிமாறப்பட்டது. இந்த  சாப்பிட்ட சிறிது  நேர்தத்தில், […]

- 3 Min Read
Default Image

இந்த மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேனில் வாங்க தடை…! ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்கள் அல்லது பாட்டில்களில் கொடுக்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு.  வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட்டாலும், அவசரமான சூழலில் அல்லது பெட்ரோல், டீசல் முடிந்த நிலையில் வாகனங்கள் இயக்க இயலாத சூழலில் பாட்டிகல், கேன்களில் பெட்ரோல், டீசலை வாங்குவதுண்டு. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்கள் அல்லது பாட்டில்களில் வாங்க கூடாது அம்மாவட்ட ஆட்சியர்  குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெட்ரோல், […]

#Petrol 2 Min Read
Default Image

திருவாரூர் மாவட்டத்தில் இந்த பகுதியில் மட்டும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி முத்துப்பேட்டை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Holiday 2 Min Read
Default Image

#Breaking:வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு!

திருவாரூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு […]

- 6 Min Read
Default Image

#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

திருவாரூர்:அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை. அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான […]

#AIADMK 2 Min Read
Default Image

அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. திருவாரூர் மாவட்டம் செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் இருசக்கர வாகனம் தீப்பிடித்துள்ளது. இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

#AIADMK 2 Min Read
Default Image

ஜாலிதான்…இந்த மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது இன்று (15.03.2022) காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது.96 அடி உயரம், 300 டன் எடையுடன் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது. இத்தேரோடத்தினையொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நகராட்சி சார்பில் 270 பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளனர்.பொது மக்கள் […]

#LocalHoliday 6 Min Read
Default Image

இந்த மாவட்டத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வான ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த […]

#LocalHoliday 2 Min Read
Default Image

இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை.!

இன்று முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக […]

#Thiruvarur 2 Min Read
Default Image