தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில் தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில் புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார். இந்நிலையில் இவரின் முறையீட்டை மதியம் 1 மணிக்கு விசாரிக்கிறது உயர்நீதிமன்ற கிளை.
திருவிடைமருதூர் அருகே உள்ள கோயில் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி வருவதையடுத்து, பக்தர்கள் அதில் நீராடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருமாந்துரையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அட்சயநாத சுவாமி கோயில், 3 ஆயிரம் பழமை வாய்ந்தது. சந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த கோயில் தீர்த்தம் பல்வேறு சிறப்புகளை உடையது. இந்த நிலையில், சந்திர கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி நிரம்பி வருகிறது. பொதுமக்கள், சந்திரதீர்த்தத்தில் நீராடியும், பாட்டில்களில் நீர் சேகரித்தும் செல்கின்றனர். இந்த […]
புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த அறிவிப்பு எண்களை வெளியிட்டுள்ளார் வேளாண்துறை செயலாளர். புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதில் தஞ்சை – 9443463976, திருவாரூர் – 7399753318, நாகை – 9443655270 மற்றும் புதுக்கோட்டை – 9443532167 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் கஜா புயலால் விழுந்துள்ள மரங்களை நல்ல விலைக்கு விற்று […]
கஜா கொடூரன் காவு வாங்க துடித்த கயவன் என்று தமிழக மக்களின் கோவத்தைய் சம்பாதித்த இரக்கமற்றவன்.இந்த கஜா புயலால் மக்கள் தங்கள் 30 ஆண்டுகள வாழ்க்கையை ஒரே நாளில் இழந்து தவித்து வருகின்றனர்.தங்கள் விளை நிலங்களில் பயிரிட்ட அனைத்தையும் அழித்து அதரவற்ற நிலையை உண்டாகிய புயலாக இந்த புயல் பார்க்கப்படுகிறது.மேலும் விவசாயிகளின் வாழ்வாதார நிலை தொடர்ந்து தற்கொலைக்கே தள்ளப்பட்டு வருகிறது.இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி அங்கே நிர்வாண முறையில் இன்னும் எத்தணையோ வழி முறைகளில் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு […]
கஜா புயலால் இதுவரை 4 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.இதனால் மக்கள் தங்கள் வீடுகள்,வளர்ப்பு பிராணிகளான ஆடுகள்,மாடுகள்,மற்றும் விவசாயம் என அனைத்தையுமே இழந்து நடு வீதி நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளது.இந்த புயல் ஒருநாளில் வீசிவிட்டு சென்ற இந்த புயலால் 4 மாவட்டங்கள் பல நாட்கள் ஏன் பல வருடங்கள் ஆகும் முழுமையாக முன்னேறி வர அப்படி இந்த புயலால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பலர் உதவி கரம் நீட்டி […]
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் திண்டிவனம், மைலம், கூட்ரேப்பட்டு, செண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது..தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சேதுபாவாசமுத்திரம் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் மின் சீரமைப்பு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை,திரூவாரூர்,நாகை ,புதுகோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மக்களுக்கு பெட்ரோல்,டீசல் தேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் த்மிழத்தில் 4 மாவட்டங்களை உலுக்கி எடுத்துள்ளது.இதில் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் மாவட்டங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் தேவைக்கு சிரமப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய ஆயில்பெட்ரோலிய நிறுவனம் தன் பங்கிற்கு 4 மாவட்டங்களுக்கு உதவும் வகையில் உதவி எண்களை தெரிவித்துள்ளது.இந்த 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தஞ்சை […]
அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகமல் முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயல் தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர்களில் ஓன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம்.இன்று காலை அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன் கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர்கூட கிடைக்கவில்லை ,உண்ண உணவில்லை , உடுத்த உடையில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.அதிகாரிகள் உடனே […]
கஜா புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. கோரத்தாண்டவமாடிய கஜா புயல் பல இடங்களில் உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லையில் வீட்ட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, மற்றும் தினேஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியின் தலையை துண்டித்துக் கொடூர கொலை நடந்துள்ளது. பிரபல ரவுடி தம்பாகார்த்தி என்பவன் முன்பு ஏழு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நரியம்மபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜாமினில் வெளிவந்த பிரகாஷ் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான் அப்போது […]
பிரசிதிபெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புகழ்பெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று(ஞாயிற்றுக் கிழமை)பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முடி காணிக்கை செலுத்தி விட்டு குளிக்கச் சென்ற பக்தர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தெப்பக்குளத்தில் துர்நாற்றமும் அதிகளவில் வீசியது.இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தெப்பக்குளத்தில் […]
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழா நடைபெற்றுவரும் நிலையில் கோயிலில்சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறையினரும் ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமன்னர் ராஜராஜன் சோழன், அவரது மனைவி லோகாமா தேவி சிலைகள் உட்பட பல சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணையை முடிக்கிவிட்டது. பழம்பெருமைவாய்ந்த காணாமல் போன இந்த […]
வரலாறு போற்றும் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதயவிழா விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியுள்ளது. ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகளை ஜஜி பொன்மாணிக்கவேல் […]
அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று தனியார் பேருந்துடன் மற்றொரு தனியார் பேருந்துமோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோடூர விபத்து பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற மீரா என்ற பேருந்தும் மேல உளூர் என்ற […]
அக்டோபர் 20 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழா நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த விழாவை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர் 20ஆம் தேதி விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடங்கி இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் தஞ்சை, நாஞ்சிக்கோட்டை, பள்ளியக்ரஹாரம், கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுள்ளது. கடந்த இந்நிலையில் சில வாரங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொதுமக்களையும் விவசாயிகளையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. DINASUVADU
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்விரைந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன கட்டிடக் கலைகளுக்கும், சோழர்களின் அபாரமான சிற்பக் கலைக்கும் சிறப்பு பெயர் பெற்றது. அங்கு சனிக்கிழமையன்று பிற்பகலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் திடீரென வருகை தந்தனர். அவர்களில் மப்பிட்டியில் 50 காவலர்கள் கோவில் நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.பின்னர், […]
சென்னையில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையை தொடர்ந்து தஞ்சை கோயிலிலும் ஐஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக சிலை கடத்தல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.மேலும் குஜராத்தில் உள்ள சாராபாய் கலிக்கோ ஃபவுண்டேஷன் என்ற அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டு சென்னைக்கு சமீபத்தில்பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கொண்டு வந்தனர். செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை […]
இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு ரமணா பட பாணியில், அறுவை சிகிச்சை செய்துள்ளது மருத்துவமனை நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான சேகர், அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தவர். வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நடத்துனர் சேகர், நாகப்பட்டினத்தில் உள்ள சந்திரசேகர் என்ற மருத்துவரிடம் காண்பித்துள்ளார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் சந்திரசேகர் குடல் இறங்கி விட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதன் பின்னர், திடீரென மேல் […]