குடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தென்மண்டல செயலாளர்கள் ராமநாதன், சிவசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட மொத்தம் 33 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதில் 37 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் மேற்பார்வையில் மோட்டார் இயக்குனர்கள், பழுது பார்ப்பவர்கள், குடிநீர் குழாய் உடைப்பை பழுது பார்க்கும் ஆட்கள் என மொத்தம் 27 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக 2 மாவட்டத்திலும் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய் தொகை ரூ.17 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த பணத்தை வருகிற 30–ந்தேதிக்குள் தரவில்லை என்றால் எங்களால் வேலை ஆட்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்படும். அத்துடன் குடிநீர் வினியோகமும் தடைபடும் நிலை ஏற்படும்.
எனவே உடனடியாக பாக்கி தொகை ரூ.17 கோடியை வழங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற ஜனவரி 7–ந்தேதி முதல் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம நடத்தவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…