வறுமையில் வாடும் ஜேஎன்யு மாணவர் முத்துக் கிருஷ்ணனின் குடும்பம்.!

Default Image

பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன்.
மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு தூக்குக் கயிரில் சுருக்கப்பட்ட போது இவர்களின் வாழ்வே இருண்டு போனது. 


துக்கம் விசாரிக்கும் சாக்கில் வாக்கு சேகரிக்க வந்த ஜந்துக்கள் எல்லாம் ” உங்களுக்கு வேலை தருகிறேன்” என ஊடகங்களுக்கு முன்னால் முழங்கி பின்னால் இவர்களுக்கு கல்விக்கு தகுந்த அரசு வேலை தராமல் அலைகழித்து ரசித்தது. நேர் வாசல் வழியே அரசு சார்பில் மூன்று லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்து விட்டு கல்விக்காக வாங்கிய கடனை வங்கி மூலம் புற வாசல் வழியே பிடுங்கியிருக்கிறது மத்திய அரசு.மூன்று பெண்களோடு தவிக்கிறார்கள் முத்துக் கிருஷ்ணனின் பெற்றோர்.ஆனாலும் அவர்கள் கோருவது முத்துக் கிருஷ்ணன் கொலைக்கான நீதியையே…!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்