சேலம் அருகே, எட்டாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அவரைக் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தர புரத்தைச் சேர்ந்த சாமிவேல் – சின்னப்பொண்ணு தம்பதியின் இளைய மகள் ராஜலட்சுமி. எட்டாம் வகுப்பு பயின்று வந்த இம்மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்கிற கார்த்தி என்பவர்
பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். ஆத்தூர் காவல் துறையினர் குற்றவாளி கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்
செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமையில் முன்னணியின் சேலம் மாவட்டச் செயலாளர் ஆர். குழந்தைவேலு, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா செயலாளர் ராமசாமி , மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்டத் தலைவர் டி. பரமேஸ்வரி ,தாலுகா செயலாளர் பெருமா, மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா தலைவர் கந்தன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளி கார்த்திக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதிகபட்ச நிவாரண தொகை வழங்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
DINASUVADU
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…