ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுத்தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்து கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
4 படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான பூண்டி என்பவருக்கு நோய் உள்ளதால், அவரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…