பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

Default Image

பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் கவிதா. கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்றிருந்த அவர் வீடு திரும்பியபோது, வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகை, 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்