உள்ளூர் செய்திகள்

அதிகனமழை எச்சரிக்கை! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அது மட்டுமின்றி, நாளை (29.11.2024) விழுப்புரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், […]

#Rain 3 Min Read
tn viluppuram school leave

திடீரென உயர தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும்  உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]

GOLD PRICE 2 Min Read
gold price

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை கீழே பார்த்து குறித்துவைத்து கொள்ளுங்கள்… சென்னை வானிலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுபெறவுள்ள காரணத்தால் சென்னையில் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 29-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு […]

#Chennai 4 Min Read
chennai rains power cut

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு […]

#Rain 3 Min Read
Cuddalore School Leave

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி […]

#Nagapattinam 4 Min Read
Holiday for schools and colleges in Nagapattinam

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை […]

#Thoothukudi 3 Min Read
fisheries man thoothukudi

AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]

aus vs ind 6 Min Read
India won the Test Match

போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில், முதல் வீரராக இந்திய அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான அர்ஷதீப் சிங் ஏலம் சென்றார். அர்ஷதீப் சிங்கிற்கு முதல் அணியாக சென்னை அணி ஏலம் கேட்டது, அவர்களைத் தொடர்ந்து டெல்லி அணியும் ஏலத்தில் குதித்தது. அதன்பின் வரிசையாக ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் போட்டியிட்டது. வெகு நேரம் கடுமையாக சென்ற இந்த […]

18 Crore 2 Min Read
Arshadeep Singh

தூத்துக்குடி : பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று 2 நாள் சுற்று பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். இன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற  பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகு, குறிச்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட […]

#Thoothukudi 3 Min Read
Udhayanidhi Stalin thoothukudi

தூத்துக்குடி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை […]

#Thoothukudi 3 Min Read
thoothukudi ooratchi aluvalazam

“சூடான பிரியாணி”.. தூய்மை பணியாளர்களுக்கு பரிமாறி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட முதல்வர்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பழைய படி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்த போது தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக விரைவாகப் பல இடங்களில் […]

#Chennai 4 Min Read
CMMKStalin

தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு தொடக்கம்! 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தூத்துக்குடி : தேசிய அளவிலான கயாக் (Kayak) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (Stand Up paddling) கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் இன்று தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த கடல் சாகச போட்டிகளைத் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் […]

#Geethajeevan 5 Min Read
Kayak & Stand Up Paddling in Tuticorin

முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்கள்! அறிமுகம் செய்த அமைச்சர்!

திருவள்ளூர் : சென்னையைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கு தற்போது தேங்கி இருக்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், மழை நீர் தேங்கி இருப்பதால் நேரடியாகச் சென்று வேகமாக உணவுகளை வழங்குவது சிரமம் என்பதால் ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கும் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, […]

drone camera 5 Min Read
KKSSR Ramachandran

அறுந்து விழுந்த மின் வயர்…சென்னை மக்களே உஷார்!

சென்னை : மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நீர் தேங்கி குளம் போலக் காட்சியளிக்கிறது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் இது சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் மக்களாகிய நாம் சில இடங்களில் பார்த்துப் பாதுகாப்பாகச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மழைக்காலம் தொடங்கிவிட்டது […]

#Chennai 4 Min Read
Chennai , T Nagar

அதிகாலையில் என்கவுண்டர்.! ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில்…

சென்னை :  50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று சென்னை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, பிரபல ரவுடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். கடந்த 2009இல் ரவுடி சதீஸ் கொலை வழக்கு உட்பட  ரவுடி பில்லா சுரேஷ், ரவுடி விஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா […]

#Chennai 5 Min Read
Kaka thoppu Balaji

சென்னை மக்களே..! புதன்கிழமை (18-09-2024) இங்கெல்லாம் மின்தடை

சென்னை :  தமிழகத்தில் வரும் புதன்கிழமை (18-09-2024) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் எ தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.  இந்த மின்தடை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படும். அது எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். சென்னை டி.எச்.ரோடு, எஸ்.பி. கோயில் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர் முதல் […]

#Chennai 2 Min Read
Chennai Power Cut

டாப் நிறுவனங்கள்., ரூ.7,618 கோடி முதலீடு., 11,516 வேலைவாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் தகவல்.!

சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]

#Chennai 6 Min Read
Tamilnadu CM MK Stalin Press meet at Chennai Airport

திடீர் மின்தடை – ‘இருளில் மூழ்கிய சென்னை’…விளக்கம் கொடுத்த மின்சார வாரியம்!

சென்னை : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் முழுவதுமாக பல இடங்களில்  நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது . திடீரென நேற்று நள்ளிரவு மின்தடை சென்னை முழுவதும் ஏற்பட்டதன் காரணமாக, மக்கள் மின்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இரட்டை மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனவும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது எனவும் […]

#Chennai 6 Min Read
chennai power cut

தேனி மக்களே…(13.09.2024) வெள்ளிக் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 13.09.2024) வெள்ளிக் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக தேனி மாவட்டத்தில் கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்தபகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! தேனி வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, […]

power cut 2 Min Read
theni power cut

மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் மகா விஷ்ணு என்பவர் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பெயரில் மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான […]

#Chennai 3 Min Read
Maha vishnu - Saidapet court