பருவமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்…!!

Default Image

நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள பருவ மழையால் இப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சரக்கு லாரிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை சீரமைக்கும் விதமாக சாலையோரத்தில் தடுப்புச்சுவர் மற்றும் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவு பெற்று, சாலைகள் மீண்டும் போக்குவரத்துப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்