உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்….இன்று புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம் …

Default Image

புத்தாண்டையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடுங்குளிருக்கு மத்தியில் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
உதகையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விளையாடிக் களித்தனர்.
படகு சவாரியும் களை கட்டியிருந்தது. ஏராளமானோர் மிதி படகு மற்றும் துடுப்புப் படகு சவாரியில் ஈடுபட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்வகைகளைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றின் அருகில் நின்று ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்