நாமக்கல்,
கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜாமணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.நந்தினி, மாவட்ட தலைவர் ஆர்.ராஜேந்திரபிரசாத், மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் குப்புசாமி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஈழவேந்தன், பார்வையிழப்பு தடுப்பு பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆர்.கே.இளவரசி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர் முருகேசன் நிறைவுரை ஆற்றினார்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…