நாமக்கல்

நாமக்கல்லில் அதிர்ச்சி.! ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.!

Published by
மணிகண்டன்

நாமக்கல்லில் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைவீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த 30ஆம் தேதியன்று இரவு பாரோட்டா சாப்பிட்டதில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக கூறி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும், 30க்கும் மேற்பட்டோர் பரோட்டா சாப்பிட்டு சிகிச்சைக்கு வந்ததை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தெரிவிக்காததால் மருத்துவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

12 mins ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

22 mins ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

1 hour ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

1 hour ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago