[Representative Image]
நாமக்கல் ராசிபுரத்தில் அறிமுகமில்லா நபர் ஒருவர் லிப்ட் கேட்டு சென்ற கல்லூரி மாணவியை தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரிலிருந்து ராசிபுரம் சென்றுள்ளார். அப்போது கல்லூரிக்கு நேரமான காரணத்தால் முன்பின் அறிமுகமில்லா இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரும் அந்த மாணவியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், தனது அக்காவுக்கு பிரசவ வலி என கூறி அருகில் உள்ள காட்டு பாதை வழியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தி மாணவியின் தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் இருந்து பணம், செல்ஃபோனை பறித்து அங்கிருந்து மாணவியின் உடைகளையும் சிலவற்றை எடுத்துக்கொண்டு இளைஞர் தப்பி ஓடி விட்டார்.
இதனை அடுத்து இளம்பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தொப்பம்பட்டி ராஜவீதியை சேர்ந்த ஐயப்பன் எனும் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…