நாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள வெளிப்பாளையத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கடந்த 31ஆம் தேதி தனது நண்பர்கள் 5 பேருடன் கருவைக் காட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதியழகனின் தலையை வெட்டித் துண்டாக்கிய மற்ற ஐவரும், உடலையும் தலையையும் குழி தோண்டி புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். மதியழகனை உறவினர்கள் தேடி வந்த நிலையில், போலீசாரிடம் சரணடைந்த மாரியப்பன் என்பவர் கொலை நடந்தது குறித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வட்டாட்சியர் முன்னிலையில் மதியழகனின் உடலைத் தோண்டியெடுத்தனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…