நாகப்பட்டினம் மதுபோதையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது!

Default Image

நாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள  வெளிப்பாளையத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கடந்த 31ஆம் தேதி தனது நண்பர்கள் 5 பேருடன் கருவைக் காட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதியழகனின் தலையை வெட்டித் துண்டாக்கிய மற்ற ஐவரும், உடலையும் தலையையும் குழி தோண்டி புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். மதியழகனை உறவினர்கள் தேடி வந்த நிலையில், போலீசாரிடம் சரணடைந்த மாரியப்பன் என்பவர் கொலை நடந்தது குறித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வட்டாட்சியர் முன்னிலையில் மதியழகனின் உடலைத் தோண்டியெடுத்தனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்