Screenshot form video [Image source : Twitter/@@ASATHATHAli1]
ஹிஜாப் அணிந்திருந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் , அந்த பெண் மருத்துவரிடம் ஏன் மருத்துவர் உடை அணியாமல் , ஹிஜாப் அணிந்து இருக்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும், மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்ட அந்த பெண் மருத்துவரும் வீடியோ எடுத்துள்ளார். இந்த இரு விடீயோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஷ் ராமை தேடி வருகின்றனர்.
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…