நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்த அஞ்சப்பன், சின்னையன், கல்விச்செல்வன், இளங்கோவன் உட்பட 13 பேர் மீனவர்கள் ராஜி என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த மாதம் 26ம் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள தூத்தூரில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ஓகி புயலில் சிக்கிய அவர்களின் படகு சிதிலம் அடைந்து, சின்னபின்னமானது.
இதில், தத்தளித்த மீனவர்களை கேரள அரசு மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் சொந்த ஊரான புஷ்பவனத்திற்கு திரும்பிய மீனவர்களை, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். உயிர் தப்பிய மீனவர்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாததால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஓகி புயலில் சிக்கி தப்பிய வேதாரண்யம் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா…