மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்நிலையில் சற்று முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் நடைபெற்றது .இறுதியாக இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடைபெறும் தேதி அறிவித்துள்ளார்.மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகின்றது .பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதியும் நடைபெறுகின்றது .அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு!மேலும் இந்த ஆண்டு ஒரு மணி […]
மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள தனியார் ஜவுளி கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் MCA பட்டப்படிப்பு இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் இறந்த அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் அம்மாணவியின் இறந்த பின்புலம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : www.dinasuvadu.com
மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதேபோல், மதுரை புது தாமரைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் ராஜாஜி அரசு மருத்துவ மனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின், மருத்துவமனை ஊழியர்கள் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் கற்பகச் செல்வி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை […]
இந்தியாவின் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய தம்பதியனருக்கு தமிழர் கலாச்சாரம் மற்றும் இந்து மத கலாச்சாரம் என்பது மிகவும் பிடித்து போனது.இத்தகைய கலாச்சாரங்களால் கவரப்பட்ட ஜப்பான் ஜோடி யூடோ, சிகாரு மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வேஷ்டி, சேலை அணிந்து உறவினர்கள் உற்சாகமாக அந்த திருமண விழாவில் பங்கெடுத்தனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் தங்களுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்கிற திமுகவின் கணிப்பை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பொய்யாக்கிவிட்டதாகக் கூறினார். தேர்தல் ஆணையத்தைக் குறை கூறும் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியதே திமுகதான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவாய்ப்புள்ளதாகவும் இல.கணேசன் சூசகமாக தெரிவித்தார். source: www.dinasuvadu.com
மதுரை; பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்த ஜல்லிக்கட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் , இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரும் திருவிழா போல நடை பெற இருப்பதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்… sources;www.dinasuvadu.com
ஒகி புயலில் மாயமான 551 மீனவர்களை மீட்கக் கோரி வழக்கு. மீன்வளத் துறை மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு . மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.. source: www.dinasuvadu.com
மதுரை அருகே பேரையூரில் பஸ் நிலையம் எதிரே தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை பணி முடிந்ததும், ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.50 மணியளவில் வங்கியின் உள்ளே தீப்பிடித்து கரும்புகை வெளியே வருவதாக பொதுமக்கள் பேரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில் போலீசாரும், டி.கல்லுப்பட்டி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, வங்கியின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு […]
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி என்பவர் வமதுரை: திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வயல் வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருதானது, டிசம்பர் 3 ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் வழங்கப்படவுள்ளது. இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக விருது வழங்கி கொவ்ரவிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிக்கை விடுத்ததன் பின்னர், இப்ப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த 7 நாட்கள் தண்ணீர் பத்தாது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
2010ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சந்தையூரில் தெற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் அஜித்குமார் (12).இவர் சத்திரம் வண்டிப்பாதையில் சைக்கிள் ஒட்டி கொண்டிருந்தபோது சைக்கிள் பளுதாகியதால் அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எஸ்.கீழப்படியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜோதிராஜ் (29) செல்போன் பேசியபடி ஓட்டி வந்து அஜித்குமார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உயிரிழந்தார். இந்த வழக்கு பேரையூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த பேரையூர் மாஜிஸ்திரேட் ராஜமகேஷ், […]
மதுரை திருமங்கலம் உள்ள மூன்று அரசு பெண்கள் விடுதியில் ஆய்வு செய்தில் கள்ளர் விடுதியும் பிற்படுத்தப்பட்டேர் நல விடுதியிலும் சுகாதாரம் மிக மோசமாதாகவும், மாணவிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டிடங்களும் உள்ளன. மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பும் விடுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) மதுரை மாநகர் சார்பாக மனு கொடுக்கப்பட்டது…
இராமநாதபுரம் மாவட்டம்:ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாக அறிவிப்பு செய்திருக்கிறது.ஆனால் அரசு நடத்தும் விழாவுக்கு மட்டும் பொருந்தாது போல.அந்த விழாவுக்கு மட்டும் விதிவிலக்குபோல???? சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டம் வரம்புபோல. இந்த விசையமானது ஊர் தலையாரி, VAO, RI, தாசில்தார், RDO, DRO, கலெக்டர் போன்ற இந்த மாவட்ட அதிகாரிகளாக இருக்கிற யாருக்குமே இந்த விஷயம் போகல அதை விடுங்க நம்ம காவல்துறைக்குமா தகவல் கிடைக்கல?????