மதுரை

மதுரையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவியை பாலமுருகன் என்ற வாலிபர் தீவைத்து எரித்தார். இந்நிலையில் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்த பாலமுருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Madurai 2 Min Read
Default Image

மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தீவிபத்து நடந்த பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு!

அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தீவிபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தீ விபத்து நடந்த கிழக்கு சுவாமி சன்னதி வாயிலை தவிர்த்து அனைத்து வாயில்கள் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலிலும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், இந்துசமய அறநிலையத்துறையினர், தொல்பொருள்துறையினர், தடயவியல் […]

india 5 Min Read
Default Image

ஆதிச்சநல்லூர் அகழாய்வு-தமிழக அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!

ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நிதியை, 2 வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அகழாய்வு நடைபெற்ற இடத்தில் மணல் குவாரி நடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அதுபோல மணல் குவாரி எதுவும் செயல்படவில்லை எனவும், உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் முன் தெரிவித்தார். இதனையடுத்து, அகழாய்வு நடைபெற்ற இடத்தை சுற்றி, வேலி […]

#Thoothukudi 3 Min Read
Default Image

பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து அகில இந்திய பார்கவுன்சிலிடம் கருத்துக் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. பார்கவுன்சில் தேர்தலில் முறைகேட்டைத் தடுக்கக் கோரி பாஸ்கர் மதுரம் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், தேர்தலில் வாக்குக்கு 30 ஆயிரம் ரூபாய், வெளிநாடு சுற்றுலா, இருசக்கர […]

india 3 Min Read
Default Image

கனிம வளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு!

கனிம வளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரைப் பெருமாள் மலையில் உள்ள சமூக நலக்காடுகளை அழித்து கல்குவாரிகள் அமைக்க தடைவிதிக்கக் கோரி மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் எந்தெந்த மலைகள், குன்றுகளில் குவாரிகள் நடத்தப்படுகின்றன? அவற்றில் எத்தனைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது ? என மாவட்ட வாரியான விரிவான விவரங்கள் அடங்கிய அறிக்கையுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க […]

#Madurai 3 Min Read
Default Image
Default Image

மதுரையில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு அளிக்கும் நிகழ்வை துவங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ ….!!

இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து அளித்து துவங்கி வைத்தார் . இதன் ஒருபடியாக மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ ராவ் அவர்களும் முனிச்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

#Madurai 1 Min Read
Default Image

அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் !சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களையும் மிஞ்சியவர் எம்ஜிஆர்…

சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களையும் மிஞ்சியவர் எம்ஜிஆர் என  அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் . மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களை விட, மக்களிடம் அதிகமான பெயரையும் புகழையும் பெற்றவர் எம்ஜிஆர், என்று குறிப்பிட்டார். அதிமுக துவங்கி 5 ஆண்டுகளில், ஆட்சிக்கு வந்த கட்சி என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக வந்தபிறகு சந்தித்த […]

#ADMK 2 Min Read
Default Image

உலகமே அதிரும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு !விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். உறுதிமொழியேற்ற பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இதில் தமிழக அமைசர்கள், நாடாளுமன்ற […]

india 4 Min Read
Default Image

மதுரை பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஆயிரத்து 2 காளைகளும் ஆயிரத்து 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முதலில் கொண்டு வரப்பட்ட 5 கோவில் காளைகளுக்கு அமைச்சர் உதயகுமார் தங்கக் காசு […]

#Madurai 4 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

​ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் நிலையில் உள்ளது  மதுரை அலங்காநல்லூர். இந்நிலையில்  மதுரை அலங்காநல்லூரில், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா வரும் 16ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன…

india 2 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆதார் தேவையில்லை…!!

மதுரை : மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் மாடு பிடி வீரர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை காண்பிக்கலாம் .எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆதார் தேவையில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு செய்துள்ளார்…

#Madurai 1 Min Read
Default Image

ஆதார் இல்லாவிட்டால் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை…

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இருந்தால் மட்டுமே மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க இயலும் என விழா கமிட்டி அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே மத்தியரசு ஆதாரை கட்டாயப்படுத்தும் வேளையில் , ஜல்லிக்கட்டு விழாவில் அமல்படுத்தபடுவது வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது.  

#Madurai 1 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்ல்லிகட்டு திருவிழா : இன்று கால்கோள் நடும் விழா

ஜல்லிக்கட்டு விளையாட்டுவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை காண தமிழகம் முழுவதிலிருந்து லட்சகணக்கான மக்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதற்கட்ட வேலையாக இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். source : www.dinasuvadu.com

alanganallur 2 Min Read
Default Image

மதுரைக்கு வருமா மெட்ரோ ரயில்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பயன் கிடைக்குமா ?

மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கிடையே, மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாத்தியமான வழித்தடத்தை போக்குவரத்து வல்லுனர் குழு அரசுக்கு யோசனையாக அளித்துள்ளது. அதிலுள்ள உத்தேச வழித்தடங்கள் வருமாறு: மெட்ரோ ரயில் பாதை மேலூரில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், […]

#Madurai 5 Min Read
Default Image

திருப்பரங்குன்றம் அருகே தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து!

மதுரை அருகே ஓட்டுனர் பற்றாகுறையால் லாரி ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மதுரை அருகே உள்ள  திருப்பரங்குன்றம் பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கியவர் லாரி ஓட்டுநராக இருந்த டேனியல் ஆவார். ஒட்டுநர் பற்றாக்குறையால் டேனியல் விளச்சேரி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கி திருநகர் 7 வது ஸ்டாப் அருகே சென்ற போது மின்கம்பம் மோதி விபத்துக்குள்ளானது.அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் விபத்து […]

#Madurai 2 Min Read
Default Image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் …!!

மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த நிகழ்ச்சியை மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  

#Madurai 1 Min Read
Default Image

மதுரையில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு !

மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் […]

#Madurai 2 Min Read
Default Image

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு – ஜனவரி 14ஆம் தேதி ஆரம்பம்…!

மதுரையில் மாவட்ட கலெக்டருடன் நடந்த சந்தித்தலில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளை கலந்துரையாடினர். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும்,பாலமேட்டில் 15ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறியுள்ளார். இது காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும். இதற்காக 500 காவலர்களும், 10 ஆம்புலன்ஸ், 3 தீ அணைப்பு படைகள் மற்றும் 10 மருத்துவ குழுக்கள் அமைக்க படும் என்று கூறியுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 500 எருதுகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Madurai 2 Min Read
Default Image

மதுரையில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கம்!

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனை தலைமையிடத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களால் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் முடிந்த அளவிற்கு அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பணிமனையில் உள்ள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். கல்வி நிலையங்களுக்கு பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். போலீஸ் […]

#Madurai 3 Min Read
Default Image