Categories: மதுரை

மீதம் உள்ள 5 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவரை புரட்டி எடுத்த பெண்…வைரலாகும் போட்டோ…!!

Published by
Dinasuvadu desk

5 ரூபாயை திரும்ப கொடுக்காததால் ஆட்டோ டிரைவரை பெண் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவை மறித்து ஏறினார். தெற்குவாசல் செல்ல வேண்டும் என அவர் ஆட்டோ டிரைவரிடம் கூறியதற்கு, அந்த டிரைவர் ரூ.15 தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட அந்த பெண் இறங்கும் போது, 20 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். மீதி 5 ரூபாயை ஆட்டோ டிரைவர் கொடுக்காமல் அங்கிருந்து நகர முயன்றதாக தெரிகிறது. உடனே ஆட்டோ டிரைவரிடம் 5 ரூபாயை கேட்டதற்கு அவர் ஏதோ அந்த பெண்ணைப் பற்றி கூற தகராறு ஆனது.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண், ஆட்டோ டிரைவரின் சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். அந்த பெண், ஆட்டோ டிரைவரை திட்டிக்கொண்டே கைகளால் தாக்கினார்.

இதை கேள்விப்பட்டு போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வேகமாக வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.இந்த காட்சிகளை அங்கு கூடியவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago