பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணை குழு வாபஸ்!

Published by
Venu

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க துறைசார் விசாரணைக் குழு அமைக்கும் திட்டத்தை, திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்ற சில முறையற்ற நிகழ்வுகளில்  பல்கலைக்கழகத்தின் பெயரும் இழுக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள் அடங்கிய 5 நபர் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான சம்பவம் தொடர்பாக எந்த பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில், பல்கலைக்கழகம் உறுதியாக இருப்பதாகவும், எனவே, துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவிடும் திட்டம் திரும்பப்பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக் குழுவுக்கு பல்கலைக்கழகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

22 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

34 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

38 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

1 hour ago